Monday, November 27, 2017

கனவு

புலம்பிப்
பயனில்லை...
நாமும்
எத்தனை மலர்களின்
கனவுகளை
பறித்திருப்போம்..

வாழ்கை

சுமைகளற்ற
வாழ்க்கையும்...
சுமைகளாகிறது
சிலநேரங்களில்...

புத்தனாகிலும்...

இனி
புத்தனாகிலும்
புத்தனாகிட
முடியாது...

அறிவதில்லை

குடக்காரனிடம்
இருக்கும்வரை
குடங்கள்
அறிவதில்லை
தண்ணீரை...

தவறொன்றுமில்லை

வருகின்ற ஒவ்வொரு
குழந்தையும் அழவேண்டும்
என்பதாகத்தானே இருக்கும்
பலூன்காரரின் பிரார்த்தனை...
#தவறொன்றுமில்லை

Friday, January 20, 2017

JALLIKATTU



ஜல்லிக்கட்டு நடத்த துள்ளிக்கிட்டு வாரோம்
தில்லுருந்தா நீயும் மல்லுக்கட்ட வாடா...
புள்ளையைப்போல் வளத்து கூட்டிகிட்டு வாரோம்
திமில தொட்டு நீயும் காட்டிபோடா வீரம்...
அப்பன் ஆத்தா ஆசி வாங்கிகிட்டு வாரோம்
குலசாமி நீறு பூசிக்கிட்டு வாடா...
சந்ததிகள் தழைக்க நேந்துகிட்டு வாரோம்
சாமிதாண்டா நமக்கு... ஜல்லிக்கட்டு வாடா...
#Jallikattu

Thursday, November 12, 2015

இந்த நட்பு புனிதமானது...


பிள்ளைப்பருவம் தொலைத்துபோவோம்
முகம்  என்பது மறந்துபோவோம்
முகவரி என்பது நினைவே அற்று போகும்
பெயர் சொல்லும் அறிமுகமும் தோல்வியாகும்
பெரிய மனித தோரணையில் நானோ நீயோ
விலகிபோகும் வலிகூட மனதில் உரைக்காது...
இதெல்லாம் அறிந்திராத
இந்த நட்பு புனிதமானது...