Monday, November 27, 2017

கனவு

புலம்பிப்
பயனில்லை...
நாமும்
எத்தனை மலர்களின்
கனவுகளை
பறித்திருப்போம்..

வாழ்கை

சுமைகளற்ற
வாழ்க்கையும்...
சுமைகளாகிறது
சிலநேரங்களில்...

புத்தனாகிலும்...

இனி
புத்தனாகிலும்
புத்தனாகிட
முடியாது...

அறிவதில்லை

குடக்காரனிடம்
இருக்கும்வரை
குடங்கள்
அறிவதில்லை
தண்ணீரை...

தவறொன்றுமில்லை

வருகின்ற ஒவ்வொரு
குழந்தையும் அழவேண்டும்
என்பதாகத்தானே இருக்கும்
பலூன்காரரின் பிரார்த்தனை...
#தவறொன்றுமில்லை